Friday, January 30, 2009

விழி வெடித்தழுகிறோம்.

விழி வெடித்தழுகிறோம்.


எனது நேசச் சொந்தங்களே!
உங்களின் வலி பார்த்து,
விழி வெடித்தழுகிறோம்.
இதயங்கள் உடைந்து கதறுகிறோம்.
உங்களை ஆரத்தழுவி
அன்பு சொல்ல வழியற்று குமுறுகிறோம்.

உலகத்தின் கடைக்கண்
பார்வைக்காக கையேந்தி நிற்கின்றோம்.
அடை மழையாய்க் கொட்டும்,
குண்டுமழை நின்று போகக் கூடாதா?
ஒரு மாற்றம் வராதா- என்று
கனவிலும் வேண்டுகிறோம்.

எமது உடன்பிறப்புகளாகிய
உங்களைக் கொல்லும்
காட்சிப்படிவங்களைப்- பார்த்து
நிலை குலைந்து போகிறோம்.
நாம் காணும் காட்சியெல்லாம்
கனவாகப் போகாதோ- என்று
கண் மூடித்திறக்கிறோம்.

பிஞ்சுக் குழந்தைகளே!
வண்டுக்கடி தாங்கமுடியா
உங்களின் பிஞ்சுடம்பு,
குண்டின் அடி.
எப்படித்தான் தாங்குவீர்களோ?
நெஞ்சுடைந்து விம்புகின்றோம்.

எம் தமிழே!
உங்களை அழித்துவிட,
மாபெரும் சுனாமி,
மனிதவடிவில் படையெடுப்பதை,
நிறுத்திட,
ஒரு அதிசயம் நிகழாதோ?
மகளும்,மகனும்,மனைவியும்
கண் மூன்னே கதறி மாண்ட
காட்சிகண்ட சகோதரனே,
உன்னைக் கொல்லவரும்
குண்டைக் காத்திருக்கும் விதிக்கு,
நான் என்ன விலை கொடுப்பேன்,
உன்னைக் காக்க.
நீ வாழ வணங்குகிறேன்.

ஒருவர் உணவைப் பத்துப் பேர்
பகிர்ந்துண்ட சோதரங்களே,
உங்கள் பசி தீரத் தொழுகிறேன்.

காயத்துக்கு கட்டுப் போட
பழைய துணி கூட இல்லாது
கதறும் சொந்தங்களே,
உங்கள் வலி தீரப் பிராத்திக்கிறேன்.

எந்தத் துணையும் இன்றி
கூவி வந்த செல்லடியில்,
சிதறிச் செத்த சோதரனே, சோதரியே
உனதாத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.

என்றும் உங்களின் நினைவில் கண்ணீருடன்
கல்லாறு சதீஷ். (30.01.2009)

Thursday, January 29, 2009

நந்தவனத்தின் வந்தவனம்

வளவை துரையன் - கடலூர்


நந்தவனம் டிசம்பர் இதழ் வந்தது. சிற்றிதழ்கள் மீது மரபுக் கவிதையை ஆதரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஒன்றைக் கூறி வருகிறார்கள். ஆனால் எப்போதும் தரமான மரபுகளை சிற்றிதழ்கள் ஆதரிக்கும் என்பதற்கு "வெற்று முழக்கம்" எனும் கவிதை எடுத்துக்காட்டு.. எப்பொழுதுமே கருமலை தமிழாழன் மரபில் சமூகக்கருத்துக்களைப் பாடுவதில் வல்லவர். புகையால் காற்று மாசடைவதால் ஓசோனில் ஓட்டைப் போடல், நதிகளில் கழிவு நீர் கலக்க வைத்தல், மரங்களை அழித்தல், பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துதல் ஆகிய சமுதாய சீர்கேடுகளை கவிதையில் மூன்று எண்சீர் விருத்தங்களை நன்கு காட்டியுள்ளார். கவிதையை வெளியிட்ட நந்தவனத்திற்குப் பாராட்டுக்கள்.

வேல் முத்தரசு - கோவை

கடும் சோதனைகளிலிருந்து மீண்டு, இன்று பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியிருக்கும் கல்லாறுசதீஷின் வாழ்வியல் தடங்களின் முன்னும் பின்னும் தடைகளாகவே இருந்திருக்கின்றது என்பது தற்சமயம் எழுத்தை ஆழ்கின்ற துறையில் அவரின் அக்கறையையும் நினைக்க ஆச்சரியமாயிருக்கின்றது. உழைப்புக்கும் நட்புக்கும், வெற்றிக்கும் அவர் காட்டுகிற அக்கறையும் தமிழக, இலங்கை மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் உட்பட அவருக்குப் போர்த்திருக்கும் பாராட்டு மழையும் அதிசயப்பட்ட வைத்தது..


கீதா முருகானந்தம் - திருவைகாவூர். தஞ்சை

டிசம்பர் 2008 இனிய நந்தவனம் கண்டேன். "வெற்றி பெறுவோம் என்ற குறிக்கோள் தமிழர்களுக்கு இருக்கிறது" சுவிட்சர்லாந்து கவிஞரும், எழுத்தாளருமான உலக அரங்கில் புகழ்பெற்று முத்திரை பதித்துவரும் கல்லாறு சதீஷ் அவர்களின் நேர்காணல், இளமையில் இலங்கையில்பட்ட துன்பங்கள், உடலில் மாறா காய அடையாளங்கள் இவையே ஓர் புரட்சிமிக்க சிந்தனையாளராக உருவாக்கியிருக்கிறது. இவையே இனிய நந்தவனம் வாசகர்களுக்கும் ஏனைய தமிழ் அன்பர்களின் மனசிந்தனைகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார் என்றால் மிகையில்லை. ஆனால் நம் இனிய நந்தவனம் வாசகர்களை திருச்சிக்கு அழைத்து அறிமுகம் செய்திருக்கலாம். டிசம்பர் 08 இனிய நந்தவனம் இவரது புதுமையான பதில்களை தந்திருந்தார். நந்தவனத்தில் இவரது கருத்துக்களை படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. கேள்விகளை சிறப்பாக கேட்டது மிக நன்று.


பிச்சை மொகைதீன் - திருச்சி.

அன்பு நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு, சரியான ஒருவரான கல்லாறு சதீஷ் அவர்களுக்கு சிறப்பான ஒருவருக்கு தர வேண்டிய சிறப்பை சிறப்பித்துவிட்டு சிறப்பித்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி அறிந்த பெரியவர்களின் கட்டுறையை வாங்கி வெளியிட்டிருப்பது மிகச் சிறப்பு. அவரின் வாழ்க்கை கவிஞர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மாணவச் சமுதாயம் இதைப் படிக்க வேண்டும் உணர வேண்டும்" என்றைக்காவது ஒருநாள் உன் கடிதமும் என் சரியான முகவரியைத் தேடிவரும்" வரிகள் எதிர்மறையாக நிறைவேடட்டும். வானம் தன் அந்தரத்து ராணிகளுடன் விளையாட கருவம் கட்டிக்கொண்டது வரிகள் கவிஞர் பீர். முஹம்மது அவர்களின் கவிதை வீரம். கவிஞர் வ.ம. குலேந்திரன் கவிதை சில்லென்று குளிர வைத்தது. கவிவனத்தில் உலகம் காட்டப்பட்டுள்ளது. ஆங்கரை பைரமியின் நூல் விமரிசனம் அருமை. தனிமையும் நட்பும் அருமை. துளிப்பாவனம் நந்தவனம் இதழே சிறப்பு இதழ்தான். (மாத இதழில் செய்திகள் அதிகம்)


குடத்தை பரிபூரணன்

கல்லாறு சதீஷ் அவர்கள், நண்பர் ஸ்ரீஸ்கந்தராஜா கூறியதைப் போன்று கிந்தி நடிகரைப் போல் வாட்டசாட்டமாகத்தான் இருக்கிறார். பெண்களும் பிள்ளைகளும் இபப்டி உடல் வாகோடு வளார்வதைக் கண்டு பெற்றோர்கள் பூரித்துப் போவார்கள் என எண்ணினீர்கள் என்றால் அது பிழை. அவர்கள் வயிற்றில் அமிலத்தைக் கட்டிக்கொண்டு இருப்பார்கள். சிங்கள ராணுவம் வாளிப்பான ஆண்களையும் பெண்களையும் கண்டால் கொத்திக்கொண்டு போய்விடுவார்கள். புலி என சித்திரவதை செய்துபோடும். பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். யானைக்கும் குதிரைக்கும் 100 முழம் எட்டி நின்றால் போதும் தப்பலாம். சிங்கள காவல் படையின் கண்ணுக்குப் படாமல் ஒளிந்து போக வேண்டும். இவ்வளவு இன்னல்களுக்கு இடையில் இமயமென உயர்ந்து நிற்கிறார் நம் கதாநாயகன் என்றால் அதற்காக அவர்பட்ட சிரமங்களை ரத்தம் வடியும் நினைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ் உணர்வு உள்ளவர்கள் கல்லாறு சதீஷ் அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. நந்தவனமும் அதைத்தான் செய்திருக்கிறது. கல்லாறு எடுத்துக் காட்டாக விளங்கும் தமிழ் மறவன் வாழ்க அவர் புகழ்..



சை. பீர். முஹம்மது


அன்பு நண்பர் நந்தவனம் சந்திரசேகருக்கு அன்பு வணக்கம்!. தங்களின் டிசம்பர் 2008 இதழ் கிடைத்தது. படித்தேன். நுழைவாயிலில் தாங்கள் கூறியது போல ஆசிரியப்பணி ஆக்கப்பணி என்பது எவ்வளவு ஆழமோ அதுபோல மாணவப்பருவமே வாழ்க்கையின் மகத்தான பருவம் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டப்புத்தகங்களை தூக்குவதை விட்டுவிட்டு உருட்டுக் கட்டையையும் இரும்புச் சட்டங்களையும் கத்தியையும் தூக்குவது வேதனை! பொருளாதார நெருக்கடியில் பெற்றோர்கள் மாணவர்களை கல்லூரிக்கு அனுப்புவது என்பது அனுபவமான பட்டறிவு. இதனை மறந்துவிட்டு வன்முறையில் ஈடுபடுவது அழகல்ல. அவர்கள் வீடு மட்டும் அல்ல நாடும் அவர்களை நம்பியிருக்கின்றது என்பது நூற்றுக்கு நூறு உண்மை எல்லா மாணவர்களும், மாணவர்களைப் பெற்றவர்களும் சிந்திக்க வேண்டிய விசயம்! முள் குத்தாமல் புதிய பாதைகள் அமைக்க என்னும் வரியினை உள்ளக்கிய கவிதை சாவு எங்களுக்கு வேர்வைத்துளி என்பதனை நாமும் கண்டுவரும் செய்தியினை படம் காட்டியுள்ளார்.


பாகமணி
செய்திக்கனல் இதழாசிரியர். திண்டுக்கல்


கல்லாறு சதீஸ் தாம் எவ்வாறு கவிஞாக படைப்பாளியாக வந்தது குறித்த நேர்காணல் நெஞ்சை உருகச் செய்தது. நல்ல பண்பாளரை அறிமுகப்படுத்தி எல்லோரும் அறிந்திட செய்த இனிய நந்தவனத்திற்கு இன்முகத்தோடு செய்திக்கனல் வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறது



டி.எம் சிவரஞ்சனி. திருவாரூர்



டிசம்பர் மாத இனிய நந்தவனம் படித்தேன். தினம் தினம் வாழலாம் வாங்க.....! கட்டுரைப் படித்தேன் மனித வாழ்க்கையின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையின் அர்த்தம் எண்ணி எண்ணி வாழ்வதின் பயன் வாழ்வின் மனித நேயம் வாழ்வின் ஒற்றுமை இவற்றை மனிதன் தினசரி வாழ்வில் கடைப்பிடிக்களை கட்டுரையாளர் த்ரு கவிஞர் லெனா அவர்கள் தெள்ளத் தெளிவாய் உணர்த்தியிருக்கிறார். வாசகர்களுக்கு நல்ல படிப்பினை நல்ல பண்பினை உணரச் செய்த இனிய நந்தவனத்துக்கும் கவிஞர் லேனா அவர்களுக்கும் மனம் நிறைஐந்த பாராட்டுக்கள் மனம் நிறைந்த நன்றிகள்.


சரஸ்வதி பஞ்சு. திருச்சி.


டிசம்பர் 2008 இதழை படிக்க நேர்ந்தது. உலகத்தமிழர்களிடையே உலாவரும் மக்கள் மேம்பாட்டு மாத இத என்பதை ஒவ்வொரு மாதமும் இனிய நந்தவனத்தில் மலரும் பூக்கள் மனத்தோடு மிளிர்கின்றன. கல்லாறு சதிஸ் உடன் ஒருநாள் பேட்டி மற்றும், அவரைப் பற்றிய பல்வேறு படைப்பாளிகளின் சிந்தனைச் சிகரங்கள் அருமை. மேலும் பூக்கள் மலர வாழ்த்துகிறேன்.


செல்வி. கு.டீ. புரட்சிமணி. குடந்தை

நுழைவாயில் வருங்கால வளர்பிறைகளுக்கு நன்கு உணர்த்தியுள்ளீர்கள். நந்தவனம் சந்திரசேகர் கருத்துக்கள் வாழ்வில் வெற்றிபெற விரும்புவோருக்கு நல்லகையேடு கல்லாறு சதிஸ் பற்றிய செய்திகள் யாவும் காலப் பெட்டகம்.




கவியருவி. மதியழகன் கரடிபட்டி.


கல்லாருசதீஷ் பற்றிய இனிய நந்தவனம் சிறப்பு இதழ் சிந்திக்க வைத்தது. இலங்கையில் பல இன்னல்களுக்கு ஆளான அவர் சுவிஸ் நாட்டுக்குச் சென்று அந்த உணவுக்குஅ மாற வேண்டிய சூழ்நிலையிலும் அதற்கு ஏற்றபடிமாறி இன்று தமிழ் இலக்கிய உலகில் நல்ல இடம் பிடித்து இருப்பது அவரும் பாறையில் செதுக்கிய சிலைபோல் தமி நெஞ்சங்களில் நீங்காமல் நின்று வாழ்கின்றார் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது.

லால் சந்திரன் லால்குடி


வெற்றி பெறுவோம் என்ற குறிக்கோள் தமிழர்களுக்கு இஎஉக்கிறது. புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் கல்லாறு சதிஸ் நேர்காணல் படித்தேன். என்னை மெய் சிலிர்க்க வைத்தது. தமிழர் மீது அவர் வைத்துள்ள நபிக்கையும் தமி மீது வைத்துள்ள பாசமும் என்னைப் போன்ற தமிழ் பற்று உள்ளவர்கலுக்கு படைப்புக்கள் எழுதும் எழுத்தாளர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். தோழருக்கு நன்றி. ஆசிரியருக்கும் நன்றி


செல்வராஜா - சேலம்

டிசம்பர் இனிய நந்தவனம் இத மிகவும் சிறப்பாக இருந்தது. கல்லாறு சதீஸ் அவர்களின் நேர்காணல் அவரது பல பரிணாமங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அறிவு சான்றோர்களின் வாழ்த்துரைகள் சதீஸ் அவர்களின் நற்பண்புகளை நமக்கு விளக்கியது. கவிஞர் மஞ்சுளா, பீர் முகம்மது ஆகியோரின் கவிதைகள் நன்று.


பரிசுபெறும் கடிதங்கள்


ராக்கி மகேஷ். கோவை

நந்தவனத்தின் நுழைவாயிலில் ஆசிரியரின் "கோபத்தோடு எழுகிறவன் நட்டத்தோடு உட்காருவான்" என்று ஆரம்பத்திலிருந்து....... வெற்றியொன்று முழங்குகிறாய்" என்று முடிக்கும் பாவலர் கருமலைத் தமிழாழன் ஐய்யா அவர்களின் முடிவுரை வரையிலும் அருமை.... அருமை.. வெற்றி என்பது உன் வீட்டைத் தேடிவருவதல்ல.. சந்தோசமாக வரவேற்க... இப்படி நறுக்கென்று வெற்றியின் பிரசவத்தைப் பார்த்த மருத்துவராக கவி பெரியசாமியையும் உங்கள் வாழ்க்கையை மற்றவர்கள் வாழ்க்கையோடு ஒப்பிடாதீர்கள்.. உங்கள் சந்தோசத்தின் மூலதனம் நீங்களே..... இப்படி சீரிய கருத்துக்களை கொணர்ந்த கவிஞர் லெணா அவர்களையும் உனது கையும் ஒருநாள் ஓங்கி நிற்கும் திரும்பிப் பார். எனக்குப் பின்னால் பலர் இருப்பார்கள் முயற்சி செய்...... என்று நம்பிக்கையூட்டும் முகமாக திருச்சி, சுகாசினியின் கருவும் இதழை மெருகூட்டியது...... தமிழ்மொழி சுவாசமாக இருக்கவேண்டும். பிறமொழிகள்.. ஆகாரம் போல் இருக்கலாம் என்று ஈழக்கவிதாசன் மா, ஞானசூரியின் தமிழ்ப்பற்று மெய்சிலிக்க வைக்கிறது. அனைத்துக்கும் மேலாக.. ஈழக்கைதியாய், சிறைக்கைதியாய், சிறைப்பறவையாய் புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் தனக்கென்று ஒரு பாணியில் தன்னகரில்லா தமிழ் புத்தனாக இலக்கியவாதியாக ஜெர்மன் மொழியில் இவரது கதையை மொழி பெயர்த்து வைக்கும் அளவுக்கு அறிஞராக முத்திரை பதித்த கல்லாறு சதீஷ் அவர்களுடைய செயலாற்றலை பட்டி தொட்டிஎல்லாம் பரவும் டெங்கு காய்ச்சல் போல் புகழை எட்டுத்திக்கும் பரவச் செய்து பாமரர்க்கும் புரியும் வண்ணம் அழகிய அட்டைப் படத்தில் முப்பரிமாணமாய் ஜொலிக்க வைத்து அவரது சாதனைகளையும் சோதனைகளையும் இதழில்ச் எதுக்கிய பாங்கு நந்தவனத்துக்கு ஒரு மணிமகுடம். ஆம் 2008க்கான சான்று.. விடிவெள்ளியாய் திகாவேண்டியவர்கள் கூழாங் கற்களாய் தேய்கிறார்களே.. என்று கவிப்பேரர்சு வைரமுத்துவின் வரிகளைப் படிக்கும்போது நெஞ்சு கனக்கிறது.... பதிப்பகதுறையில் சாதனை படைத்து உலா வரும் லேனா, தமிழ்வாணன், ரவி தமிழ்வாணன் சகோதரர்கள். இவர்களின் பேரன்பைப் பெற்ற கல்லாறு சதிஷ் என படிக்கும்போது இவ்வளவு விஷயங்களை இந்த மாத இதைல் தந்து.. ஆசிரியர் நம்மை அசத்தியிருக்கிறார்.. மேலும் புத்தாண்டில் மேலும் பல சாதனையாளர்களைக் கண்டு அடையாளம் காட்ட "நந்தவனம்" இதழையும் ஆசிரியையும் பாராட்டுகிறேன்.


கா. இரா. குப்புதாசு. செஞ்சி

ஐய்யா வணக்கம் இனிய நந்தவனம் டிசம்பர் 2008 இதழ் நுகர்ந்தேன். நாளைய உலகை ஆளப்போகும் நம்பிக்கை நட்சத்திரங்கள் தங்களை உணரவேண்டும் அவர்களை நம்பியே எதிர்கால சமுதாயம் உள்ளது என்ற நுழைவாயில் அறைகூவல் சமுதாய பொறுப்புணர்வின் வெளிப்பாடு. நெப்போலியனின் தெளிவான சிந்தனை எல்லா வெற்றியும் எளிதாக வரும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு. வேதனையை சாதனையாக்க இளைஞர்கள் வீறுநடைபோட வேண்டும் என்ற கருத்து புது ரத்தம் பாய்ச்சட்டும், நட்புக்கு இலக்கணம் வகுத்த கல்லாறு சதீஷ் குறித்த செய்திகள் புதிய உறவு ஒன்றை வாசகர்களுக்கு தந்தது. எங்கள் தமிழரும் இனி நீடூழி வாழ்க நன்றே" என்ற நன்னெறியில் நடைபோடும் இந்த அறிமுகமே அச்சாரம் கூறும் சிப்பிக்குள் முத்தான வெளியுலகுக்கு கொணர்ந்தமைக்கு ஓராயிரம் நன்றி. சூர்யமதியின் கவிவனத்தில் உலகம் இதுதான் என்பதை உணர முடிந்தது. காட்டிக் கொடுக்கும் கருங்காலிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதனை பீர்முகம்மதுவின் கவிதை தோலுரித்துக் காட்டியது. ஒவ்வொருவரின் சந்தோசத்திற்கும் மூலதனம் அவர்களே தான் என்ற கவிஞர் லெனாவின் கூற்று ஓராயிரம் உண்மை கூறியது. எல்லோரும் நல்லவரே என்ற எண்ணமே வளமை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்லும் என்பதான ம. திருவள்ளுவர் அழகு தமிழில் சொல்லியுள்ளார்.


வி.சுப்பிரமணியம், பி. கொமாரபாளையம்

கல்லாறு சதீஷ் புன்னகையுடன் வெளிவந்த இனிய நந்தவனம் இத கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. கல்லாறு சதீஷின் நேர்காணல் மிகவும் அருமையாகவும், பயனுள்லதாகவும் இருந்தது. சட்டக்கல்லூரியில் நடந்த வெறியாட்டத்தைப் பற்றி ஆசிரியரின் தலையங்கம் சிந்திக்க வைத்தது. சை.பீர்முகம்மதுவின் "சாவு எங்களுக்கு வேர்வைத்துளி" கவிதை அருமை. கோல்டு ஈகிள் அப்ளையன்சஸ் நிறுவனம் நடத்திய தீபாவளி சிறப்பு பரிசளிப்பு விழா தொகுப்பும், புகைப்படங்களும் நன்றாக இருந்தது. மேலும் இதழில் வெளிவந்த அனைத்து பகுதிகளும் நன்றாக இருந்தது. தொடரட்டும் இனிய நந்தவனத்தின் இலக்கியப் பணி.



கவிஞர் இரா. இரவி - மதுரை

தலையங்கம் சென்னை அம்பேதகர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரவுடிகளை மிஞ்சும் அளவிற்கு மோதிக் கொண்ட காட்டுமிராண்டித்தனத்திற்கு கண்டனத்தை உரக்கப் பதிவு செய்தது சிறப்பு. தங்களின் இனிய நண்பர் கல்லாறு சதீஷ் சிறப்பித கனமாக இருந்தது. அதே நேரத்தில் இதயத்தைக் கனமாக்கியது. ஈழத்தமிழர்களின் வாழ்வில் நடந்த கொடுமைகளையும் புலம் பெயர்ந்த வாழ்வின் இன்னல்களையும் புலம்பெயர்ந்த சோகத்திலும் இலக்கியம் வளர்க்கும் இனிய மனிதர்களின் உஐப்பையும் உணரும் விதமாக சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள் சிகரங்கள் சித்திரங்கள் தொடர் புரட்சிப் பெண் காவல் அதிகாரி கிரண்பேடி பற்றியும் மாவீரன் நெப்போலியனின் சுறுசுறுப்பு பற்றியும் எடுத்துக் கூறி தன்னம்பிக்கை விதைவிதைத்து கவிதைகள் சிந்திக்க வைத்தது.


அந்தோணிராஜ் - திருச்சி

டிசம்பர் மாத இதழ் முற்றிலும் மாற்றத்துடன் கல்லாறு சதீஷ் அவர்களின் சிறப்பிதழாக வெளிவந்தது மகிழ்ச்சி. வளர்ந்துவரும் என்போன்ற ஆரம்பக் கட்ட எஉத்தாளர்களுக்கு அவரை(கல்லாறு சதீஷ்) அறிமுகப்படுத்தி வைத்தது போல் இருந்தது. மிகப்பெரிய சாதனையாளரை என் போன்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. அவரோடான தங்கள் உரையாடல் நாங்களே பங்குபெற்றது போல இருந்தது. வாசகர் படைப்புக்கள் அனைத்தும் சிறப்பாய் இருந்தது. நினைவுகள் தொலைத்த இடம் மு செயலா அவர்களின் கவிதை இதயத்தை ஏதோ செய்தது. வாசகர் கடிதங்கள் கூட கவிதைகள் போல சுவையாக இருப்பது நம் நந்தவனத்தில் மட்டுமே. உண்மைதான். எழுதுகோலின் ஏக்கம் உண்மைதான். கண்ணதாசன் அவர்களின் கவிதை இன்றைய பத்திரிகையாளர்களின் நிலையை காட்டியது. கடமைக்காக கவிதைகள் வெளியிடும் இதகளுக்கு நடுவே டிசம்பர் இதழில் வெளிவந்த அனைத்து கவிதைகளும் ஒவ்வொரு விதமாய் அசத்தியது. சூரியமதி அவர்களின் இதுதான் உலகம்" கவிதை ரொம்ப நேரம் யோசிக்க வைத்தது. கல்லாறு சதீஸ் சிறப்பிதழ் மட்டுமல்ல. கவிதை சிறப்பிதழ் எனவும் சொல்லலாம். உண்மையாகவே இம்மாத இதழ் காகித பூவின் தேன் துளிகள், கண்னாடி சித்திரங்கள் போல் பாதுகாத்து வைக்கவேண்டிய பொக்கிஷம். பொங்கல் சிறப்பிதழ் சிறாப்பாய் அமைய அன்புடன் வாழ்த்துகிறேன்.


கருமலைத் தழிழாழன். ஓசூர்

படத்துடன் என் கவிதையை வெளியிட்டமைக்கு நன்றியினை உரித்தாக்குகிறேன். "மாணவர்கள் நலன் கருதி எழுதப்பட்ட தலையங்கம் ஒவ்வொரு மாணவனும் மனதில் பதித்து படிப்பிலே கவனம் செலுத்தினால் வீடும் நாடும் நன்மைகள் பல பெறும்".



புலவர் ஞானசேகரன் - திருலோக்கி


விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எல்லா வெற்றியும் எளிதாகவே வரும் என்பதற்கு நெப்போலியனை முன்னிறுத்தி அவர் வழிமுறைகளையும் பிற சான்றுகளையும் எடுத்தியம்பியுள்ள ஆசிரியரின் பதிவுகள் சோம்பேறிகளையும் "சுரீர்" எனத்தட்டி எழுப்பும். ஈழ மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து குளிர் நிலத்தில் வெற்றிக்களம் அமைத்து நம் நெஞ்சங்களை குளிர்விக்கின்ற கல்லாறு சதீஷைப் பற்றி பன்னாட்டவரிடையே நம் நாட்டவரும் தந்துள்ள இழையோடல்களும் ஆசிரியரின் நேர்காணலில் மலர்ந்த மண்ணின் மணமும் அள்ளித்தந்த செய்திகள் உள்ளத்தில் ஆழப் பதிந்து வேரூன்றின. சிங்கள வெறியர்களால் 18 ஆண்டுகட்கு முன்பு சிறைப்படுத்தப்பட்ட தமிழ் இளைஞராம் சதீஷின் கதறலும் கண்ணீருந்தான் அவருடைய உயர்வுக்கும் புகழுக்கும் வித்திட்டு நீராகவும் உரமாகவும் பயன்பட்டு வளர்ந்திருக்கின்றது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஈழ மண்ணை விட்டு புலம்பெயர்ந்த போது தாயகத்தை விட்டாரேயன்றி நம் மொழியை விடமொழியை விடவில்லை என்பதே நமக்குப் பெருமை.

Tuesday, January 27, 2009

விழுதல் என்பது எழுகையின் வடிவமே!!!(மனவொலி/3)

விழுதல் என்பது எழுகையின் வடிவமே!!!(மனவொலி/3)


எந்த இனம் எம்மை நாடோடியாக்கியதோ,
அந்த இனத்தவருக்காகத்தான் காத்திருந்தோம்,
அவர் வருகையில்தான் அது புரிந்தது.
எங்களின் கடவுசீட்டுக்கள் வாங்கப்பட்டன.
மீண்டும் பல நாட்கள் காத்திருப்பு தொடர்ந்தது.
காதலுக்காகக் காத்திருத்தல் சுகமாக இருக்கலாம்,
கடவுச்சீட்டுக்காகக் காத்திருத்தல்
எத்தனை வலி என்பதை அனுபவித்து அறிந்தேன்.
எங்களிடம் இருந்த பணங்கள் வாங்கப்பட்டன.
எங்களில் பலர் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டோம்.
நாம் சென்ற பாதையை இத்தொடரில்,
மெளனத்தின் ஒலியில்தான் பேசமுடியும்.
இன்னும் அந்தக்கணங்களை
இதயத்தில் ஏற்றி நினைத்துப்பார்க்கையில்
உடல் ஒரு கணம் அதிந்து துடிக்கும்.

நகரும் வீட்டில் நாங்கள் ஏற்றப்பட்டோம்.
ஏற்றியவர் ஒரு வெள்ளைக்காரர்.
நள்ளிரவில் அந்தப் பயணம் தொடங்கியது.
அது ஒரு நாட்டின் எல்லையை,
அந்த நாட்டுப்படைக்கே தெரியாமல் கடந்து,
நுழைந்து கொள்ளவேண்டிய பயணம்.
அது எனக்கு புரிந்து போனதால்,
தூக்கம் கெட்டேபோனது.
சிறு துவாரத்தினூடாக வாகனத்திலிருந்து
வீதியைப்பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.
இயற்கைக்கடன்களுக்குக் கூட
நிறுத்தப்படாமல் ஓடிய வாகனம்,
திடீடரென நிறுத்தப்பட்டது.
அது வெறும் ஜந்து நிமிடங்கள்தான்.
மீண்டும் ஓடுகிறது,ஓடுகிறது ஓடிக்கொண்டேயிருக்கிறது.
நேரம் அதிகாலை ஜந்து மணி.
இப்போது எங்கள் அனைவரையும்
இறங்குமாறு பணித்தார் அந்த வெள்ளைக்காரர்.
என் பாதங்கள் தொட்ட
அந்தப் பூமி சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநகரம்.
(மனவொலி தொடரும்)

Tuesday, January 20, 2009

"தேடிய இயந்திரம் ஓய்ந்து இன்றுடன் 31 நாட்கள்"

டாக்டர் இந்திரகுமாருக்கு மலராஞ்சலி.

டாக்டர் இந்திரகுமார் மறைந்து இன்றுடன் 31 நாட்கள் (20.01.2009) நிறைவடைகின்றது.


லண்டன் மாநகரிலே, இன்றுடாக்டர் இந்திரகுமார் அவர்கள் அமரத்துவம் அடைந்த 31வது நாள் அனுட்டானங்கள் நடைபெறுகிறது. இந்த வேளையில் டாக்டர் இந்திரகுமார் அவர்கள், கிருஷ்ணசாமி அவர்களுடைய 31வது நாள் அனுட்டானங்கள் வேளையில் வீரகேசரியில் 08.01.2006 அன்று எழுதிய கட்டுரையை எனது பதிவுகள் பக்கத்தில் நினைக்க விடுகிறேன்.

காரணம் கிருஷ்ணசாமி ஐயா எனது மனைவி வழியில் எனக்கும் தாத்தா. அவரை நான் நேரிலே பார்க்காது விட்டாலும், தொலைபேசியில் பேசி மகிழ்ந்துள்ளேன். எனக்காக அவர் கொடுத்துச் சென்ற நூல்கள் இன்னும் பத்திரமாக இருக்கின்றன. அரியபல நூல்கள் சேர்த்தே புகபெற்ற கிருஷ்ணசாமி ஐயா மறைந்த செய்தியை அமரர் டாக்டர் இந்திரகுமாருக்கு தொலைபேசியில் நான்தான் தெரிவித்தேன். அப்போது என்னுடைய வேண்டுகோளுக்கிணங்கவும் தன்னெழுச்சியாகவும் டாக்டர் இந்திரகுமார் அவர்கள் எழுதிய கட்டுரைதான் கீழே தொடர்வது. அமரர் கிருஷ்ணசாமியின் 31ன் போது அமரர் டாக்டர் இந்திரகுமார் வடித்த வார்த்தைகள், அவரின் 31ன் போது.......


கிடைத்தற்கரிய நூல்களை வாங்கிச் சேகரித்த

"Google" கிருஷ்ணசாமி


கணினிகளைப் பாவித்த அனுபவம் உள்ளவர்களுக்கு இணையத் தளங்களைச் சல்லடை போட்டு ஆய்வுசெய்யும் கூகிள்(Google) என்ற தேடல் இயந்திரத்தைப்(Search Engine) பற்றித் தெரியாமல் இருக்க முடியாது. கணினியில் பாவிக்கக் கூடிய தேடல் இயந்திரங்களுக்குள் மிகப் பாரியதும் ஆற்றல் மிகுந்ததும் வேகம் உடையதுமாக கூகிள் விளங்குகிறது.

சமீபத்தில் எனது கணனியில் லெமூரியா என்ற சொல்லை கூகிளில் பதிவுசெய்து அதனைத் தேடுமாறு பணித்தேன். ஒரு நிமிடங்களுக்குள் அந்தப் பெயர் கொண்ட ஒரு நீண்ட பட்டியலை கணினி முன் வைத்தது. குமரிக்கண்டம் என்றும் அழைக்கப்படும் லெமூரியாக் கண்டத்தைப் பற்றிய குறிப்புக்களை மட்டுமல்லாது, அதனைப்பற்றி வெளிவந்துள்ள நூல்களின் பட்டியலையும் மட்டுமல்லாது, லெமூரியா என்ற பெயர் கொண்ட ஏனைய விஷயங்களின் பட்டியலையும் கூகிள் வெளிப்படுத்தியது.

லெமூரியாக் கண்டத்தைப் பற்றி வெளிவந்துள்ள நூல்களின் பட்டியலை எடுத்துப் பதிவாக எடுத்துக்கொண்டேன். அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு அந்த நூல்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பகீரதப் பிரயத்தனத்துக்கு எனது மனதை தயார்படுத்திக் கொண்டேன்.

கூகிள் தேடல் இயந்திரத்திற்கு நன்றி

கடந்த சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் வரலாறு என்னும் பாரிய துறையில் ஆய்வுகள் செய்ய நான் முனைந்தபோது பல முன்னோடி வரலாற்று நூல்களைத் தேடவேண்டி வந்தது. அந்த நூல்கள் இருக்கக்கூடிய புத்தக விற்பனை நிலையங்களோ நூலகங்களோ லண்டனில் இல்லை. எனது நண்பர்கள் மூலம் இலங்கையிலுள்ள புத்தகசாலைகளில் தேடியபோது அந்த நூல்களின் பிரதிகள் விற்றுத் தீர்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்ற பதிலே கிடைத்தது.

கந்தையா கிருஷ்ணசாமி என்ற ஒரு தமிழர் கொழும்பில் வசிப்பதாகவும் அவருடன் தொடர்பு கொண்டால் நூல்களைப் பெறும் வாய்ப்பு உண்டு என்றும் எனது நண்பர் ஒருவர் தகவல் தந்தார். அவரது தொலைபேசி இலக்கத்தையும் தந்தார்.

இலண்டனிலிருந்து அவருடன் தொலைபேசியில் பேசினேன். எனது ஆய்வுக்குரிய வரலாற்றுப் பகுதிகளை ஓரளவு விளக்கினேன். இவைகள் பற்றிய நூல்கள் வேண்டும் என்றும் சொன்னேன். அவர் என்னை மறுநாள் மாலை மீண்டும் பேசச்சொன்னார். பேசினேன். இரண்டொரு நூல்களின் பெயரைச் சொல்லுவார் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அவரோ நான் கேட்ட துறையில் பத்துப் பதினைந்து நூல்களின் பெயர்களையும் விலைகளையும் தந்தார். ஒரு புதையலே கிடைத்த மகிழ்ச்சி எனக்கு. இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பதிப்பிக்கப்பட்ட அந்த நூல்களுக்கு மிகவும் நியாயமான விலை சொன்னார் அவர்.

எனது நண்பர்கள் அவரிடம் விரைந்தனர். நூல்களை வாங்கி கூரியர் மூலம் எமக்கு அனுப்பி வைத்தனர். எனது ஆய்வுகள் தொடர்ந்தன.

எனக்கு அதிக உதவியாக விளங்கியது உலகப் புகபெற்ற கூகிள் தேடல் இயந்திரமா? அல்லது வெள்ளவத்தையைச் சேர்ந்த கந்தையா கிருஷ்ணசாமியா?

எனது வாக்கு கிருஷ்ணசாமிக்கே. தேடல் இயந்திரம் எனக்கு நூல்களின் பட்டியலைத் தந்து அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கும் பகீரதப் பிரயத்தனத்தையும் தந்தது. ஆனால் கிருஷ்ணசாமி ஐயாவோ எனக்கு நூல்களின் பட்டியலையும் தந்து நியாய விலையையும் சொல்லி நூல்களையும் அளித்துள்ளார். இத்தனையும் இரண்டே இரண்டு நாட்களுக்குள் இரண்டு கண்டங்களுக்கிடையே நடைபெற்று முடிந்துவிட்டன.


எனக்கு இத்தகைய இன்ப அனுபவத்தை அள்ளித்தந்த அந்த அபூர்வ மனிதர் "கூகிள்" கந்தையா கிருஷ்ணசாமி 31 நாட்களுக்கு முன்னர் தனது இயக்கத்தை தனது 88ஆவது வயதில் நிறுத்திக்கொண்டு மீளாத்துயில் ஆழ்ந்துவிட்டார்.

அவருடன் எனக்கு ஏற்பட்ட இந்த முதற் தொடர்பை அடுத்து ஆறு மாதங்களின் பின் இலங்கை செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அவரைக் கண்டு பேசவேண்டும் அவரிடம் மேலும் நூல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வ மிகுதியுடன் அவரது இல்லத்திற்குச் சென்றேன்.

86 வயசுக்குரிய உடல் தளர்ந்த தோற்றம். 40 வயதுக்கேற்ற உளச்சுறுசுறுப்பு, ஊக்கம் பணிவன்புடன் கூடிய இன்ப சுபாவம் என்பன கூடிய ஒரு இளம் முதியவரைச் சந்தித்தேன். அவர் நூல் சேகரிப்பவர் மட்டுமல்ல. நூல்களை ஆழமாகக் கற்று அவை தந்த அறிவையும் நினைவுகளையும் கணினி போல் மனதில் பதித்துக் கொண்டவர் என்பதையும் உணர்ந்துகொண்டேன்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளி ஆய்வு பற்றிய ஒரு தமிழ் நூலை எழுதி வெளியிட்டு அதற்குரிய ஒரு தமிழ்நூலை எழுதி வெளியிட்டு அதற்கு சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது நான் தானா? என்று அவர் கேட்டார். ஆம் என்று பதிலளித்தேன்.

1971 இல் வீரகேசரி வாரமலரில் "மண்ணில் இருந்து விண்ணுக்கு" என்ற கட்டுரைத் தொடரை ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எழுதி வந்தேன். வீரகேசரி நிறுவனம் தனது மாதமொரு நூல் வெளியீட்டுத்திட்டத்தின் கீழ் சிறுகதைத் தொகுப்புக்களையும் நாவல்களையும் மட்டுமே வெளியிட்டு வந்தது.

மண்ணில் இருந்து விண்ணுக்கு கட்டுரைத் தொடரை நூலாக வெளியிட வெளியீடுகளுக்குப் பொறுப்பாயிருந்த பாலச்சந்திரன் தீர்மானித்தார். நூலும் வெளிவந்தது. அதற்கு இலங்கையின் மிக உயர்ந்த இலக்கியப் பரிசான சாகித்திய மண்டல விருது 1973 இல் கிடைத்தது. அறிவியல்துறைக்கு இத்தகைய ஒரு விருது இலங்கையில் வழங்கப்பட்டது. அதுதான் முதல்தடவையாகும். 2000 பிரதிகள் அச்சிடப்பட்டு அத்தனையும் விற்றுத் தீர்ந்தன.

2003 இல் நான் கிருஷ்ணசாமி ஐயாவைச் சந்தித்தபோது அந்த நூலின் ஒரு பிரதிகூட என்னிடம் இல்லை. வீரகேசரி நிறுவனத்திடம்கூட பிரதியேனும் இருக்கவில்லை. இதைப்பற்றி கிருஷ்ணசாமி ஐயாவிடம் சொல்லி அங்கலாய்த்துக்கொண்டேன்.

அதன்பின் ஈழத் தமிழர் வரலாறு பற்றி எனக்குத் தேவையான சில வெளியீடுகள் பற்றி அவரிடம் சொன்னேன். வழக்கம் போல மறுநாள் தன்னைச் சந்திக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

அடுத்தநாட் சந்திப்பின்போது நான் கேட்டுக்கொண்ட வரலாற்று நூல்களை அவர் தேடிக்கொண்டு வந்திருந்தார்.

நூல்களுக்கான விலையைக் கொடுத்து அவற்றை மனமகிழ்வுடன் பெற்றுக்கொண்டேன்.

"டாக்டர், உங்களுக்குத் தருவதற்கு ஒரு பரிசும் வைத்திருக்கிறேன்" என்றார் அவர்.

வியப்புடன் அவரை நோக்கினேன்.

"மண்ணிலே இருந்து விண்ணுக்கு" நூலின் பிரதி ஒன்றை எடுத்து என் முன்னால் வைத்து அதைத் தனது அன்பளிப்பாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

1973 இல் அந்த நூலுக்கான சாகித்திய மண்டலப் பொரிசை இலங்கை ஜனாதிபதி சேர் வில்லியம் கோபல்லாவ அவர்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட போது ஏற்பட்ட அதே புளங்காகிதத்துடன் நான் தொலைத்து விட்டுத் தேடிக்கொண்டிருந்த அதன் பிரதியை 2003 இல் கிருஷ்ணசாமி ஐயாவிடமிருந்து பரிசாகப் பெற்றது என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு சகானுபவம் ஆகும்.

கொழும்பு கொம்பனித்தெருவில் உள்ள ஒரு பழைய வீட்டில் தான் வாழ்நாளில் தேடிய பல்லாயிரம் நூல் செல்வங்களுடன் கிருஷ்ணசாமி வாழ்ந்து வந்தார். இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் தனது பேத்தியுடன் வசிக்க வெள்ளவத்தை வந்து சேர்ந்தார்.

அவரிடம் இருந்த கிடைத்தற்கரிய நூல்களைப் பெற்றுக்கொள்வதற்கு எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், அறிஞர்கள், எப்போதும் வந்து சென்றனர். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா தான் ஆற்றியா சென் பிரான்சிஸ்கோ சொற்பொழிவினைத் தேடி எடுப்பதற்கு கிருஷ்ணசாமி ஐயாவின் உதவியை நாடினார். ஐயாவைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்ல தனது காரைக் கொம்பனித்தெருவுக்கு அனுப்பி வைத்தது ஒரு வரலாற்றுப் பதிவு ஆகும்.

ஐயாவின் புகழ் கடல் கடந்த பிரிட்டன்வரை பரவியிருந்தது என்றால் பாருங்களேன்.

பல்லாண்டு காலம் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் சபாநாயகராக விளங்கிய திருமதி பெற்றபூத் ரொய்ட் அம்மையார் கூட பி.பி.சி நிருபர் ஜோன் ரெற்றியையும் அழைத்துக்கொண்டு ஐயாவைச் சந்திக்க வந்திருக்கிறார். தனக்குத் தேவைப்பட்ட அரிய நூல்களை விலை கொடுத்து வாங்கிச் சென்றிருக்கிறார்.

எலிசெபெத் மகாராணியும் அவரது குழுவினரும் 1981 இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது பிரித்தானிய அரசு சம்பந்தப்பட்ட புராதன ஆவணங்கள் சிலவற்றை அவர் மகாராணியாருக்கு வழங்கியிருக்கிறார். காலஞ்சென்ற ஆறாவது ஜோர்ஜ் மன்னரின் மகுடாபிஷேகம், மற்றும் வெள்ளிவிழா சம்பந்தப்பட்ட பத்திரங்களின் பிரதிகளையும் கொழும்பில் உள்ள இராணி மாளிகையைப் புனருத்தாரணம் செய்வதற்கு முன்வைக்கப்பட்ட திட்டங்களும் இவற்றில் அடங்கியிருந்தன.

இவற்றைஅன்புடன் பெற்றுக்கொண்ட மகாராணியின் குழுவினர் தமது தாயகம் திரும்பியதும் கிருஷ்ணசாமி ஐயாவுக்கு நன்றி தெரிவித்து மகாராணியின் பணிப்புரையின் பேரில் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தினூடாக ஒரு கடிதத்தினை அனுப்பி வைத்தனர். ஐயா கொடுத்த பத்திரங்கள் பிரித்தானிய அரச நூலகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அக்கடிதம் தெரிவித்தது. இக் கடிதத்தை பெருமையுடன் பிரேம் போட்டு வைத்திருந்தார் கிருஷ்ணசாமி ஐயா.

கிருஷ்ணசாமி ஐயா தமது வாழ்க்கையில் திரட்டிச் சேமித்து வைத்த பொக்கிஷங்களான நூல்களைத் தனது பேத்திக்கு உயில் எழுதி வைத்து விட்டு ஒரு மாதத்திற்கு முன்னர் மீளாத்துயிலில் ஆழந்தார்.

அவரது நூல்கள் நான்கு அறைகள் கொண்ட ஒரு வீட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்லன. இந்த வீட்டுக்கான வாடகை மாதத்திற்கு 2ஓஓ ரூபாய்.

இன்று கூகிள் கந்தையா கிருஷ்ணசாமி அவர்கள் அமரத்துவம் அடைந்த 31வது நாள் அனுட்டானங்கள் நடைபெறுகிறது. இந்தவேளையில் அவரது அமரத்துவத்திற்கு வழிகோலிய காரணங்களை முன்வைப்பதில் மனநிறைவு அடைகிறேன்.

Monday, January 19, 2009

2.விழுதல் என்பதும் எழுகையின் வடிவமே!!!

2.விழுதல் என்பதும் எழுகையின் வடிவமே!!!

நான் மட்டும் போகவில்லை.
எனக்கு மட்டும் இந்தச் சோகம் இல்லை.
போக முடிந்த எல்லோரும் இலட்ச இலட்சமாய்ப் போனார்கள்.
போவதற்காக இலட்ச இலட்சமாய்ப் பணம் கொடுத்துப் போனார்கள்.
எனக்கு எங்கே போவதென்று தெரியாது.
எப்படிப் போவதென்றும் தெரியாது.
பலர் போகும் திசையில் நானும் போகிறேன்.
இது பெரும் பயணம்.
சட்டரீதியான பயணம் அல்ல.
ஆபத்துக்கள் நிறைந்த பயணம்.
விமானத்திலிருந்து முதன் முதலாய்
இன்னுமொரு தேசத்தைப் பார்க்கிறேன்.
அது அழகாக இருந்திருக்க வேண்டும்.
பச்சைப் புல்வெளிகளும், அழகிய கட்டிடங்களுமாய்,
மனதைக் கிளர்ச்சி கொள்ள வைத்திருக்க வேண்டும்.
ஆனால் எனக்கு அப்படியேதும் நடக்கவில்லை.
எத்தனை பேரிடம் இந்தப் பயணத்துக்காகப் பணம் வாங்கினேன்.
இறுதி நேரப் பிரிவின் போது,
உறவுகளின் எத்தனை கேள்விகளை எதிர் கொண்டேன்.
இதயம் நொறுங்க விடைபெற்றேன்.
உயிரைக் காக்க எத்தனை வலிகள்.
இவ் வாழ்வில்.
எங்கேனும் ஒரு தேசத்தில் புகலிடம் தேட வேண்டும்.
சரியாகப் புகலிடம் பெற யார் சொல்லித் தருவார்கள்?
செய் முறை படித்துச் செயல் என்பதை விட,
செயலூடகச் செயல்,
செய்துதான் பார்ப்போமே.
புதிய தேசத்தில்
தங்கும் விடுதியில் இன்னும் பலருடன்
நானும் தங்கவைக்கப் படுகிறேன்.
ஐரோப்பிய தேசம் நோக்கிப் போக வேண்டும்.
மீண்டுமொரு சோகம் தாக்காத வாழ்வைத் தேட வேண்டும்.
இந்தப் பயணப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.
யாருக்காகவோ காத்திருக்கச் சொன்னார்கள்.
நீண்ட நாட்களில் இன்னும் அவர் வரவேயில்லை.

விழுதல் என்பதும் எழுகையின் வடிவமே!!!

விழுதல் என்பதும்

எழுகையின் வடிவமே!!!

இதுவொரு புதிய மனவொலித் தொடர்... .

-*கல்லாறு சதீஷ்-*.....
1.


மலர்களின் வாசம் பிடிக்கவில்லை.
குயில்களின் கீதம் பிடிக்கவில்லை.
மயில்களின் நடனம் பிடிக்கவில்லை.
இப்படி இன்னும் என்னென்ன பிடிக்கவில்லை?
பைத்தியம் பிடிக்கவில்லை.
கூடாது.
பிடிக்கக்கூடாது.
பைத்தியம் பிடிக்கக்கூடாது.
கூடாது.
பிடிக்கக்கூடாது.
பொலீசோ,இராணுவமோ
மீண்டும் என்னைப்பிடிக்கக்கூடாது.
ஆன்மா தவிக்கிறது.
கணங்கள் ஒவ்வொன்றும்
அனாதைப் பிணமாவேனோ
எனும் எண்ணம்,என்னைத் திணறச் செய்கிறது.
வந்துவிட்டேன்.
விமான நிலையத்தின் இறுதி நிமிடங்கள்
என்னை உந்தித்தள்ளுகிறது.
இறுதியாக இலங்கைத்தீவின் மடியிலிருந்து
என் பாதங்கள் தூக்கி விமானத்திலேறுகிறேன்.
அதோ!
பிறந்தது முதல் வாழ்ந்து வந்த அந்தத் தேசத்தை விட்டு,
காற்றை உதைத்து,
விமானப்பறவை மேலே மேலே
மேகங்களைக் கிழிக்கிறான்.
கண்ணாடியூடாக பூமிப்பந்த்தைப் பார்க்கிறேன்.
இது என் கிராமமாக இருக்குமோ?
இனி நான் மீண்டும்
என்று இத்தேசம் வருவேனோ?
என் தேசத்தைப் பிடித்த நோயின் கோரம்
என்று தீர்ந்து போகுமோ?
போகிறேன்.
என் தேசம் விட்டு,
என் கிராமம் விட்டு,
என் உறவுகளை விட்டுப் போகிறேன்.

Thursday, January 15, 2009

போகாதே நீ போகாதே.... பாடல்

என்னால் உருவாக்கப்பட்ட பாடலுக்கு, என் நண்பன் குல்தீப் அவர்களால் மெட்டமைக்கப்பட்டு பாடப்பட்ட பாடல்..... முதன்முதலாக உங்களுக்காக என் வலைத்தளத்தில்.....


Tuesday, January 13, 2009

நண்பன் குல்தீப் பய் - ஆனந்த விகடன் பேட்டி




இசைதான் சென்னைக்கு இழுத்து வந்தது.






குல்தீப் பய்
வயது - 27
பாட ஆரம்பித்தது - 6 வயதில்
படிப்பு - BCA கபியூட்டர்
குரு - N.P ராமசாமி & O.S தியாகராஜன்

நெற்றியில் அழகான சந்தனக் கீற்று. எப்போதும் சிரித்த முகம். துருதுருவென்று எப்போதும் சுறுசுறுப்பு.

தாய்மொழி கொங்கிணி. எனவே வீட்டில் அந்த மொழியில் தான் பேச்சு எல்லாம். வெளியே போனால் மலையாளம் அல்லது ஆங்கிலம்.

கொச்சியில் படித்து வளர்ந்த இளைஞர் குல்தீப் பய். சென்னைக்கு வந்தது 2002 இல் தான். இந்த ஆறு வருடங்களில் தமிழில் பேசக் கற்றுக் கொண்டதோ, பாடக் கற்றுக் கொண்டதோ பெரிதல்ல. சங்கத் தமிழ் போன்ற கடினமோ அகநாநூற்றுப் பாடல்களையே "ஐந்திணை" பற்றிய டாக்குமென்டரிக்காகப் பாடியிருக்கிறார் குல்தீப்.!

கொச்சியில் இருந்த வரையில் N.P ராமசாமி என்பவரிடம் இசை கற்றுக் கொண்டுவிட்டு, சென்னை வந்த பிறகு O.S தியாகராஜனிடம் இரண்டு வருடங்களாக கர்நாடக இசை பயின்று வருகிறார் குல்தீப்.

குல்தீப் BCA எனப்படும் கொம்பியூட்டர் அப்ளிகேசன் தான் கல்லூரியில் படித்தார். "கர்நாடக இசை மேல் உள்ள காதலால்தான் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். வாழ்க்கையில் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உந்துதல் தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தது!" என்கிறார் இந்த 27 வயது இளைஞர்.

பிறகு. மெட்ராஸ் யூனிவர்வர்சிட்டியில் மியூசிக் டிபார்ட்மென்டில் சேர்ந்து முதல் ராங்க் மட்டுமல்ல தங்கப்பதக்கமும் பெற்றது 2005 ம் வருடம்.

மூன்று வயதிலேயே பாட்டுக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் குல்தீப். ஆறாவது வயதில் அரங்கேற்றம். மட்டாஞ்சேரி என்ற கொச்சியின் புறநகரில் உள்ள கெளட சாரஸ்வத் சேவா சமிதி இடம் கொடுத்தது.

"S. ஜானகி, O.S.அருண், வாணி ஜெயராம் ஆகியவர்களுக்கு ஹார்மோனியம் வாசித்திருக்கிறேன். சென்னை வந்த பிறகு மிருதங்கம் வாசிக்க மன்னார்குடி ஈசுவரன் சாரிடம் கற்றுக்கொண்டேன். கொச்சியில் இருக்கும்போது திரு. ஹரிஹரன் என்ற கலைஞரிடம் வயலின் ஆரம்பத்தில் கற்று வந்தேன்" என்கிறார் குல்தீப்.

குடும்பத்தில் பெற்றோருக்கு இசையில் ஆர்வம் இருந்ததே தவிர, முறையாகப் பாடுபவர்கள் அல்ல. (அப்பா சிண்டிகேட் வங்கி அதிகாரி, அம்மா தபால் துறை ஊழியர்.)
ஆனால் அப்பாவின் குடும்பத்தினர் பஜன் எல்லாம் பாடுவார்கள். அம்மா படிக்கும்போது ஸ்கூல்ல மியூசிக் டீச்சராக இருந்த ஆன்டனி பாகவதர், எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் இருந்தார். அதனால் அவரிடம் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். "ஸ்வர ஞானம் இருக்கிறது. அந்த ஞானம் கூடவே பிறந்தமாதிரி எனக்குத் தெரிகிறது." என்றாராம் ஆன்டனி பாகவதர்."

சென்னைக்கு வருகிறவரை பழையகால வித்வான்கள் யாரைப் பற்றியும் கேள்விப்பட்டதில்லையாம் குல்தீப்! "உண்மையாத்தான் சொல்றேன். இங்க வரவரைக்கும் செம்மங்குடி, கே வி என் எல்லாம் யார்னே எனக்குத் தெரியாது என்று சொல்லிச் சிரிக்கிறார்.

"மெட்ராசுக்கு வந்தப்புறம்தான் இந்தப் பெரியவர்களோட பாட்டெல்லாம் கேக்க ஆரம்பிச்சேன். கர்நாடிக் மியூசிக் இந்த அளவுக்கு பரந்து விரிந்தது. பிரமாண்டமானது என்பது இங்கே வந்த பிறகுதான் தெரிந்துகொண்டேன்.

குல்தீப் பய்க்கு அந்த பாணி - இந்த பாணி என்று சொல்வதில் எல்லாம் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. சாகித்தியத்துக்கும் பக்தியுணர்வுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது அவர் கருத்து.

பாவத்துக்கும் நிறைய இடம் கொடுக்கணும் சிலர் இதை என்னிடம் கண்டு கொன்டு பாராட்டியிருக்கிறார்கள். அப்படி நான் உணர்ச்சிமயமாகப் பாடும்போது அதில் அம்பாளைக் காண முடிந்தது என்று பாராட்டியிருக்கிறார்கள் என்கிறார் குல்தீப்.

முழுநேர கர்நாடக இடைச் கலைஞானாக இருக்க முடியுமா? அதாவது கர்நாடக இசைப் பாடகனாகவே இருப்பது வாழ்க்கைக்கு உதவுமா?


நிச்சயமாக முடியும். ஆரம்பகால பிரச்சனைகளை சமாளிக்கிற துணிச்ச்சல் இருந்தால் சங்கடங்களை எதிர்கொள்ளும் சாமர்த்தியமும் இருந்தாக வேண்டும். அது நம்மைப் பொறுத்தது. நிறைய வாய்ப்புக்கள் இருக்கு. அதில் எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நூறு சதவீதம் நாம் இருந்தா வெற்றி நிச்சயம்.

சீரியஸ்ஸா எடுத்துக்கொண்டா சம்பாதிக்கின்றதுன்னு இருந்தா ஐ டி ல வேலை பார்க்கிறவரைவிட பத்துமடங்கு சம்பாதிக்கலாம். இதுல இன்னொரு வசதி இருக்கு. ஒவ்வொரு நிமிசமும் உங்களுக்குப் பிடிச்சதையே செய்யலாம். அதை அனுபவிக்கலாம். வேலைல ஈடுபட்டபடியே அப்படியே சம்பாதிக்கவும் செய்யலாம். நீங்க வேலை செய்யாத மாதிரிதான் உங்களுக்குத் தோணும். அதனால் புதியதைக் கண்டு பிடிக்கணும், நான் கர்நாடக இசையோடு நின்றுவிடவில்லை, வெஸ்டர்ன் கிளாசிகல் கத்துக்கிறேன். பியானோ வாசிக்கக் கத்துக்கறேன் அதுவும் பியூர் கிளாசிகல், சிம்போனி வாசிக்கும்போது இது தேவை

சினிமால பாடற ஆசை உண்டா?

பிலிம் மியூசிக்ல நிச்சயமா இன்டரஸ்ட் உண்டு. இப்போ சமீபத்துல ஸ்விட்சர்லாந்துல இருக்கிறா தயாரிப்பாளரோட 'டமில் வெட்டிங் (தமிழ் திருமணம்) படத்துக்கு நாலு பாட்டு பாடியிருக்கேன். ஒருபாட்டு நானே மெட்டமைச்சு பாடியிருக்கேன். மூணு பாட்டு இங்கிலீஷ்ல இருந்து தமிழ் பண்ணியிருக்காங்க.

இந்த வாய்ப்பு வந்தது எப்படி?


ஆஸ்திரேலியால மெல்பர்ன் நகரத்துக்குப் போனபோது அங்கே ஒரு நிகழ்ச்சி, சதீஷ் என ஒருவர் வைரமுத்து சாருக்கு நெருங்கிய நண்பர். நான் பாடறதை ரொம்ப ரசிச்சுக் கேட்டார். முடிஞ்சதும் சதீஷ் என்கிட்டே ' நான் ஒரு பாட்டு இப்போ எழுதுறேன், ட்யூன் பண்ணுவீங்களா? என்று கேட்டார். நானும் மெட்டுப்போட்டுப் பாடிக்காட்டினேன். உடனே அவரோட மொபைல்ல ரிகார்ட் பண்ணிக்கிட்டார். சுவிஸ்ல அந்த மியூசிக் டைரக்டர் பால்ஸ் பேக்மேன் (Balz Backman) கேட்டார். அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. பாட்டெல்லாம் எழுதின பிறகு சதீஷ் எனக்குக் கொடுத்தார். பாடினேன். அப்புறம் இங்கே வந்து எல்லா பாட்டையும் ரிகார்ட் பண்ணினார் என்றார் குல்தீப்

எனக்கு காட் பார்தர் யாரும் கிடையாது. ஆனால் கடவுள் மேல நிறைய நம்பிக்கை உண்டு. கடுமையான உழைப்பு மேலே நம்பிக்கை உண்டு.

பாட்டுத்தான் தொழில்னு முடிவு செஞ்சபோதுகூட எங்க இருந்தும் ஒரு பாஸிடிவ் சப்போர்ட் யாரும் தரலே. எனக்கு அப்போ மெச்சூரிட்டியும் போதாது. என் அப்பா அம்மா என்னைப் பற்றி நம்பிக்கை இல்லாம இருந்திருப்பாங்க. என்னைப் பற்றி கவலைப்பட்டிருப்பாங்க. ஆனா என்னோட மியூசிக் ஆல்பம், "அத்விதா" வெளியீட்டு விழாவுல ஞானகியம்மா, பி பி சீனிவாஸ், பி.எஸ்.நாராயணசாமி சார், ஓ எஸ் தியாகராஜன் சார், மன்னார்குடி ஈசுவரன் சார் எல்லாரும் இருந்த மேடைல என் அப்பா அம்மாவும் இருந்தாங்க அப்பதான் என்னை ஒரு கன்ட்ரட் பர்சன்ட் மீயூசிஷியனா ஏத்துக்கிட்டாங்க அப்பதான் என்னோட அப்பா அம்மா கூட புரிஞ்சுக்கிட்டாங்க

கோயிலுக்குப் போறதுண்டா?

போவேன் அசாத்திய கடவுள் நம்பிக்கை உண்டு. எங்க அம்மாவும் அப்பாவும் விடிகாலைல மூணு மணிக்கெல்லாம் எழுந்திருந்து குளிச்சுட்டு தோட்டத்துல் இருக்கிற அவ்வளவு பூக்களையும் பறிச்சுட்டு வந்து மாலை தொடுத்து வீட்டுல சுவாமிக்குப் போட்டுட்டு பக்கத்துல இருக்கிற ஆஞ்சநேயர் கோயிலுக்கும் கொடுப்பாங்க.
லலிதா சகஸ்ரநாமமும் விஷ்ணு சகஸ்ரநாமமும் சொல்லாத நாளே கிடையாது. கடவுள் பக்தியோட நம்பிக்கையும் உண்டு அவர்களுக்கு. ஆறேழு வருசத்துக்கு முன்னால என் தகப்பனார் மொட்டைமாடியில் இருந்து மாங்காய் பறிச்சிட்டு இருந்தப்ப கால் தவறி விழுந்துட்டார். கால் அடிபட்டு கணுக்கால் உடைஞ்சுபோச்சு. ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணினோம். மூணு மாசம் பெட் எடுக்கணும். அப்புறம்தான் வேலைக்குப் போகலாம் நாங்க. ஆனா ஒரே வாரத்துல குணமாகி வீட்டுக்கு வந்துட்டார். ஒருமாசம் ஆனவுடனே பழையபடி வேலைக்கும் போக ஆரம்பிச்சுட்டார். அந்த ஸ்பிரிச்சுவல் பவர் அல்லது சக்தி, எனக்கும் மியூசிக்ல உதவுறது. நாம என்னதான் செஞ்சாலும் கடைசில நல்லவன் நல்லதையே நினைக்கிறவன் செய்யுறவன் என்ற பெயர் இந்த வாழ்க்கை ல முக்கியம் சார். அப்படி செய்ய தூண்டுறது தெய்வபக்தி இல்லியா?


குல்தீப் பய் மிகவும் தெளிவாக இருக்கிறார் சங்கீதம் என்றால் என்ன என்பதில்

நம்ம மியூசிக்கை மட்டும் தெரிஞ்சுக்கிட்டா போதாது. அது ஒரு பக்கம்தான். நான் அப்படி ஒரே வகை இசையோடு நின்றுபோய்விடப் போவதில்லை. கர்நாடக இசை என்று இல்லை. எல்லா இசையிலுமே மொத்தம் 12 ஸ்வரங்கள்தாம் என்கிறார்

பொழுதுபோக்கு?

இசைதான்

முடிவாக நான் மிகுந்த திருப்தியுடன் வாழ்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை. 2006 வரை நான் ஆகாய விமானத்தையே பார்த்ததில்லை. ஆனால் 2007,2008 இல் நான்குமுறை அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் பயணம் செய்தேன். ஆஸ்திரேலியாவுக்கு மூன்று தடவை போய் வந்தேன். நியூஸிலாந்துக்கு மூன்று தடவை.

இந்தியாவில் கச்சேரிகளும் வந்துகொண்டிருக்கின்றன. என் இசைப் பயனம் சுகமாகவே இருக்கிறது. என்கிறார் குல்தீப் பய்.















Thursday, January 8, 2009

நந்தவனம் மின்னிதழ்


"வெற்றி பெறுவோம் என்ற குறிக்கோள் தமிழர்களுக்கு இருக்கிறது" புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் கல்லாறு சதீஸ் (சுவிட்சர்லாந்து) என்ற தலைப்புடனும், புகைப்படத்துடனும், 2008 டிசம்பர் மாதம் வெளியான "இனிய நந்தவனம்"

உலகத் தமிழர்களிடையே உலாவரும் மக்கள் மேம்பாட்டு மாத இதழ்.. இனிய நந்தவனம்.


நந்தவனத்தை பார்வையிட இங்கே அழுத்துங்கள்.

நந்தவனம் மாத இதழ்

இச்சிறப்பிதழ் குறித்து வீரகேசரி வார பத்திரிகையில் வெளியான கருத்து.

அவுஸ்திரேலியா வானொலி பேட்டி

மறைந்த டாக்டர் இந்திரகுமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அவுஸ்திரேலிய வானொலியினர் நடாத்திய ஒலிபரப்பிற்கு வழங்கப்பட்ட பேட்டி.






மறைந்த டாக்டர் இந்திரகுமார் பற்றிய ஒரு நினைவு வெள்ளம்.

Wednesday, January 7, 2009

கல்லாறு சதீஷ் என்றவுடன் பல நினைவுகள்! -மின்தமிழ் Narayanan Kannan

Narayanan Kannan
Profil anzeigen

கல்லாறு சதீஷ் என்றவுடன் பல நினைவுகள்!
வடிவான துடிப்புள்ள இளைஞர். சமூகப்பொறுப்பும், தமிழ் ஆர்வமும் மிக்க இளைஞர். தன்மீதும், தாம் வாழும் சுவிஸ் தமிழ் சமுதாயத்தின் மீதும் நம்பிக்கை வைத்து தன் உழைப்பால் வளர்ந்த இளைஞர். தமிழ் வளர்த்த சான்றோர் என்று சரிதம் எழுதும் நாம் என்றாவது ஓர் நாள் ஆதரவற்ற நிலையில் வேர் பிடுங்கப்பட்டு வேற்று நிலத்தில் விதைக்கப்பட்டும் வளர்ந்து செழிக்கும் தமிழர் பற்றி எழுத முற்படுவோம். அதுவோர் புதிய சரித்திரமாக இருக்கும். எம்.எஸ்.உதயமூர்த்தி, சுகபோகானந்தா போன்றோர் பேசும் பேச்சை செயலாக்கிய பலர் இன்று ஐரோப்பிய மண்ணில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழ்க்கை வரலாறு பதியப்பட்டால் பாரதிதாசன் பேசும் "புதியதோர் உலகம்" படைப்பதற்கான உத்வேகம் கிடைக்கும்.
வாருங்கள் சதீஷ்!

Dr.Narayanan Kannan

Tuesday, January 6, 2009

ஆலயம் - கதை

என்னால் ஆக்கப்பட்ட ஆக்கங்களுள் என்னை மிகவும் கவர்ந்த ஆக்கமாக இந்த "ஆலயம்" கதை அமைந்திருக்கின்றது.


ஆலயம் - பாகம் 1


ஆலயம் - பாகம் 2


ஆலயம் - பாகம் 3


ஆலயம் - பாகம் 4


ஆலயம் - பாகம் 5


ஆலயம் - பாகம் 6


ஆலயம் - பாகம் 7


ஆலயம் - பாகம் 8.முற்றும்



இந்த ஆலயத்தை தரிசித்து சென்ற உங்களுக்கு எனது நன்றிகள்.

Sunday, January 4, 2009

Successful Tamil writers in abroad by K.S. Sivakumaran-DAILY NEWS


Lankan writers published in Chennai

Successful Tamil writers in abroad by K.S. Sivakumaran

More and more Thamilian and Islamic writers from Sri Lanka are finding publishers in India and abroad. They obtain a wider market for their books. Manimekalai Pirasuran in Chennai had been publishing Lankan writers since 1997. At least about five books published by them had won coveted prizes in both Thamilnadu and Sri Lanka.
K. Indrakumar, A. Muttulingam, Rajeswari Balasubramaniam, Kallaru Satheesh and A. C. Raheel and Ganeswaran were such successful writers. I noticed from the catalogue that Lanka born writers in London,Switzerland, France, Germany, Netherlands, Norway, Qatar, Oman, Kuait, Sweeden, New Zealand, Australia and Denmark numbering 100 had been published through the Chennai publishers.
As far as writers in Sri Lanka itself are concerned, writers from Colombo, Thirukoanamalai, Mattakalappu, Yaalpanam, Malaiaham and Puttalam, numbering 44 have been featured.
And on November 6, 12 books by Lankan writers published by this concern will be launched at the CTS in Wellawatte.